மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட வழக்கில் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். கணவர் கைது செய்யப்பட்டது குறித்து எந்தவித கருத்தும் சொல்லாமல் பல நாட்களாக அமைதி காத்து வந்த ஷில்பா ஷெட்டி தற்போது மவுனம் கலைத்திருக்கிறார்.
அதையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் அமெரிக்க எழுத்தாளர் ஜேம்ஸ் தர்பர் எழுதிய ஒரு புத்தகத்தில் இடம் பெற்றுள்ள வரிகளை மேற்கோள் காட்டி அந்த பதிவினை போட்டுள்ளார். அதாவது, நடந்து முடிந்ததை நினைத்து கோபம் கொள்ளாதே, நடக்கப்போவதை நினைத்து பயம் கொள்ளாதே. ஆனால் நடந்து வருவதில் விழிப்புடன் இரு என்று எழுதியிருக்கிறார்.
மேலும், நம்மை காயப்படுத்தியவர்களை நினைத்து கோபப்படுவோம். எதிர்காலத்தில் நடக்கப்போவதை நினைத்து தேவையில்லாத பயத்தை மனதில் போட்டு குழப்பிக் கொள்வோம். ஆனால் அது தேவையில்லை. அவர் எழுதியதைப்போன்று நடந்ததை நினைத்து கோபத்தை காட்டுவதோ அல்லது வருத்தப்படுவதோ தேவையில்லை. நடப்பதில் தெளிவாக இருப்போம். என்னுடைய கடந்த காலங்களில் பல சோதனைகளை கடந்து வந்துள்ளேன். அதேபோல் இதையும் கடந்து வருவேன். நான் எனது வாழ்க்கையை வாழ்வதற்கு எதுவுமே தடையாக இருக்காது என்று பதிவிட்டுள்ளார் ஷில்பா ஷெட்டி.
![]() |




