இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழில் கடந்த நான்கு வருடங்களாகத்தான் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், ஹிந்தியில் 14 சீசன்கள் முடிந்துவிட்டது. இந்த வருடத்திற்கான 15வது சீசன் அக்டோபர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது.
கடந்த 11 சீசன்களாக சல்மான்கான் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வருகிறது. கடைசியாக ஒளிபரப்பான 14வது சீசனில் சல்மான்கான் ஒரு வாரத்திற்கு 20 கோடி வரை சம்பளம் வாங்கினாராம். ஆனால், வர உள்ள 15வது சீசனில் ஒரு வாரத்திற்கு 25 கோடி வரை தனது சம்பளத்தை உயர்த்திவிட்டாராம்.
நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு இருப்பதால் சல்மான்கான் கேட்ட தொகையை தயாரிப்பு நிறுவனம் வழங்க சம்மதித்துவிட்டதாம். மொத்தம் 14 வாரங்கள் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் மட்டும் சல்மான் மொத்தமாக 350 கோடி வரை சம்பாதித்து விடுவார்.
ஒரு படத்தில் 100 நாட்கள் நடித்தால் கிடைக்கும் சம்பளத்தை விட 14 நாட்களில் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினால் மூன்று மடங்கு சம்பளம் அதிகம் வரும். இந்தியாவில் ஒரு வருடத்திற்கு அதிகமாக சம்பாதிக்கும் பிரபலங்களின் டாப் 5 பட்டியலில் சல்மான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.