தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சாகுந்தலம் படத்தை அடுத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் சமந்தா, அடுத்தபடியாக நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் ஒரு வெப் சீரிஸில் நடிப்பவர் புதிய படங்களில் நடிப்பதற்கு கதைகள் கேட்டு வருகிறார். சமந்தா ஹிந்தி படங்களில் இதுவரை நடிக்காத போதும் அவர் நடித்த பேமிலிமேன்-2 வெப்சீரிஸ் மூலம் ஹிந்தி ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்ததொடர் சமந்தாவிற்கு பாலிவுட்டில் ஏராளமான ரசிகர்களை பெற்றுக் கொடுத்திருக்கிறது.
அந்தவகையில், பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர், பேமிலிமேன்-2 தொடரில் சமந்தா மிகச்சிறப்பாக நடித்திருந்ததாகவும், அவரது கேரக்டரை தான் வெகுவாக ரசித்ததாக தெரிவித்திருப்பவர், அவருடன் இணைந்து நடிக்க தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஷாகித் கபூர் தற்போது பேமிலிமேன்-2 தொடரை இயக்கிய ராஜ்-டிகே இயக்கி வரும் புதிய வெப்தொடரில் நடித்து வருகிறார்.




