பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் தனது அலட்டல் இல்லாத, சற்றே நெகடிவ் சாயல் கலந்த நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கொளையடித்தவர் நடிகை ரிது வர்மா. தற்போது தெலுங்கில் நாக சவுர்யா ஜோடியாக வருடு காவலேனு என்கிற படத்தில் நடித்துள்ளார். நதியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.
அதனையொட்டி சமீபத்தில் இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்தி அதில் அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டேவை கலந்துகொள்ள செய்து புரமோஷன் நிகழ்வுகளை ஆரம்பித்துள்ளனர். அதனை தொடர்ந்து புரோமோஷனின் ஒரு புதிய நிகழ்வாக தற்போது ஒரு திருமண நிகழ்வுக்கு நாக சவுர்யாவும் ரிது வர்மாவும் ஜோடியாக சென்று மணமக்களை வாழ்த்தியதோடு, அங்கே நடைபெற்ற சில சடங்கு நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து கொண்டனராம்.