ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்த அந்தாதுன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.. மூன்று தேசிய விருதுகளை அள்ளிய இந்த படம் சமீபத்தில் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. இதன் தமிழ் ரீமேக் விரைவில் வெளியாக உள்ளது. அதேசமயம் இந்தப்படத்தின் ஒரிஜினலான ஹிந்தியில் கதாநாயகர்களில் ஒருவராக நடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை தான் நழுவ விட்டதாக நடிகர் துல்கர் சல்மான் தற்போது கூறியுள்ளார்.
ஹிந்தியில் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துவிட்ட துல்கர் சல்மானுக்கு அந்தாதுன் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கும் சூழல் உருவானது. ஆனால் அந்த சமயத்தில் சரியான தகவல் தொடர்பு இரு தரப்பினருக்கும் இடையே ஏற்படாததால் அந்த வாய்ப்பு தன்னிடம் இருந்து கைநழுவிப் போனது என தற்போது ஒரு பேட்டியில் துல்கர் சல்மான் கூறியுள்ளார். தற்போது அவர் நடித்துள்ள குருப் என்கிற படம் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் வெளியாகி உள்ளது. அதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசியபோதுதான் துல்கர் சல்மான் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.