ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
துல்கர் சல்மான் நடித்து நேற்று வெளியான படம் குரூப். இந்திரஜித் சுகுமாறன், ஷோபிதா துலிபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கி உள்ளார். துல்கர் சல்மானே தயாரித்துள்ளார். இந்த படம் கேரளா போலீஸ் மற்றும் சர்வதே போலீஸ் அமைப்பான இண்டர்போல் ஆகியவற்றால் 1984ம் ஆண்டு முதல் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சுகுமார குரூப் என்பவரின் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
படம் முடிந்த பிறகு சுகுமார குரூப்பின் குடும்பத்திற்கு போட்டுக்காட்டி அவர்களின் ஒப்புதல் பெற்றே வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இந்த படம் சுகுமார குரூப்பின் தனியுரிமையை பாதிக்கிறது, அவரது குடும்பத்தினர் இந்த படத்தை விரும்பவில்லை எனவே படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று கொச்சியை சேர்ந்த செபின் தாமஸ் என்பவர் கேரள உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்திற்கு தடைவிதிக்க மறுத்து விட்டது, என்றாலும் இதுகுறித்து விளக்கம் அளிக்க படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், மத்திய, மாநில அரசுகளின் காவல்துறை மற்றும் இண்டர்போலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.