நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
கடந்த வருட இறுதியில் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் குரூப் என்கிற திரைப்படம் வெளியானது. துல்கர் சல்மானை முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகப்படுத்திய ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர்தான் இந்த படத்தை இயக்கியிருந்தார். கேரளாவில் எண்பதுகளில் வாழ்ந்த, இன்சூரன்ஸ் பணத்திற்காக ஆசைப்பட்டு தான் இறந்து போனதாக சித்தரிப்பதற்காக, வேறு ஒரு நபரை கொலை செய்த குற்றவாளியான சுகுமார குரூப் என்பவரின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது.
கொரோனா தாக்கத்தின் இரண்டாவது அலை ஓய்ந்த சமயத்தில் இந்த படம் தியேட்டரில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அப்போதே ஐம்பது கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது இந்த படம். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அனைத்து மொழி ஓடிடி வெளியிட்டு உரிமைகள் விற்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து படத்தின் வசூல் மற்றும் ஓடிடி உரிமைத்தொகை எல்லாம் சேர்த்து குரூப் திரைப்படம் 118 கோடி மொத்தமாக வசூலித்துள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள துல்கர் சல்மான், இதற்கு காரணமாக இருந்த ரசிகர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.