சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் |
துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் நவ., 12ல் குருப் என்கிற படம் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் வெளியானது. 'செகண்ட் ஷோ' படம் மூலம் துல்கரை சினிமாவில் அறிமுகப்படுத்திய ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தில் சுகுமார குருப் என்கிற கிரிமினல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் துல்கர் சல்மான்.
பான் இந்திய படமாக வெளியானதால் வெளியான ஐந்து நாட்களிலேயே 50 கோடி வசூலித்து ஆச்சர்யப்படுத்திய இந்தப்படம், இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில் தற்போது 75 கோடி வசூலித்துள்ளது. இதுவரை 35 ஆயிரம் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. துல்கரின் சினிமா பயணத்தில் அவரது முந்தைய படங்களுடன் ஒப்பிடுகையில் வசூலில் இது மிகப்பெரிய சாதனை என்றே சொல்லலாம்.