டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் | ஷாருக்கானின் பதான் பட வசூலை முறியடிக்கும் துரந்தர் |

கடந்த வருடம் கொரோனா முதல் அலை ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை மலையாள திரையுலகில் வெளியான படங்களில் நடிகர் பிரித்விராஜ் படங்களே அதிகம். அது மட்டுமல்ல தற்போது அதிக படங்களிலும் நடித்து வருகிறார் பிரித்விராஜ். அந்தவகையில் அவர் நடித்துள்ள ஜனகணமன என்கிற படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. தற்போது அவர் நடித்து வந்த விலாயுத் புத்தா என்கிற படத்தின் படப்பிடிப்பும் முடிந்து விட்டது. இந்தப்படம் இந்துகோபன் என்பவர் எழுதிய விலாயுத் புத்தா என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் டபுள் மோகனன் என்கிற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்துள்ளார். அதேசமயம் இந்த படத்தில் பாஸ்கரன் பிள்ளை என்கிற இன்னொரு முக்கிய கதாபாத்திரமும் இருக்கிறது. இந்த இருவருக்கும் இடையே ஏற்படும் ஈகோ மோதல் தான் இந்த படத்தின் கதை. பிரித்விராஜ் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களில் வெளியான டிரைவிங் லைசென்ஸ் மற்றும் அய்யப்பனும் கோஷியும் ஆகிய இரண்டு படங்களும் இரண்டு நபர்களுக்கான ஈகோ மோதலை மையமாக வைத்து உருவாகி மிகப்பெரிய வெற்றியும் பெற்றன. அந்தவகையில் பிரித்விராஜூக்கு இந்த ஈகோ யுத்தம் சென்டிமென்ட் இந்த படத்திலும் கைகொடுக்கும் என நம்பலாம்.