துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
கடந்த சில தினங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் குருப் என்கிற திரைப்படம் வெளியானது. எண்பதுகளில் கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்ட குருப் என்கிற குற்றவாளியை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. தான் இறந்து விட்டதாக நாடகமாடி தனது இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக கேரளாவை சேர்ந்த சாக்கோ என்கிற இளைஞனை கொலை செய்த குற்றத்திற்காக, தற்போதும் தேடப்படும் குற்றவாளியாக இருக்கும் குரூப் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார்.
அதேசமயம் கொலை செய்யப்பட்ட சாக்கோ கதாபாத்திரத்தை சார்லி என்கிற பெயரில் நடிகர் டொவினோ தாமஸ் நடித்திருந்தார். அவரது மனைவியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இவர்கள் இருவருமே படத்தில் இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான காட்சியிலேயே நடித்திருந்தனர்.
இப்படி இவர்கள் இருவரும் நட்புக்காக தனது படத்தில் நடித்ததற்காக இவர்கள் இருவருக்கும் தனித்தனி போஸ்டர் வெளியிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார் துல்கர் சல்மான். முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் டொவினோ தாமஸ் மற்றும் அனுபமா இருவருமே இன்னொரு முன்னணி நடிகரின் படத்தில் இப்படி சில நிமிடம் வந்து போகும் கெஸ்ட் ரோலில் எடுத்திருக்கிறார்கள் என்றால் ஒரு பெரிய மனது வேண்டும்.