22 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரத்தில் இப்போது கேமியோவாக நடிக்கும் மம்முட்டி | கடைசியாக நடித்த படத்தில் நள்ளிரவு 2 மணிக்கு நடனமாடிய தர்மேந்திரா | இங்கு மட்டுமல்ல சவுதியிலும் 'ஜனநாயகன்' வெளியாவதில் சென்சார் சிக்கல் | தமிழில் கவனம் செலுத்தும் மலையாள நடிகர் அஜு வர்கீஸ் | சிரஞ்சீவி பட இயக்குனருக்கு மோகன்லால் கொடுத்த அதிர்ச்சி | சிவகார்த்திகேயன் திரையிலும், நிஜத்திலும் என் சகோதரர் : அதர்வா நெகிழ்ச்சி | 'ஹேப்பி ராஜ்' படப்பிடிப்பு நிறைவு | 'ஜனநாயகன்' தணிக்கை தாதமம், காரணம் என்ன ? | பிளாஷ்பேக்: மூன்று நட்சத்திரங்களின் திரைப் பிரவேசத்திற்கு வித்திட்ட “பட்டினப்பிரவேசம்” | மீண்டும் படம் இயக்க உள்ளேன்: பாக்யராஜ் பேட்டி |

மலையாள திரையுலகில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்காட்டு வித்தியாசமான படங்களை எடுத்து பெயர் பெற்றவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. தற்போது மம்முட்டியை வைத்து நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் சுருளி என்கிற படம் ஒடிடியில் வெளியானது. ஜோசப் புகழ் நடிகர் ஜோஜு ஜார்ஜ் இந்தப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். ஒடிடியில் வெளியான இந்தப்படம் சென்சார் செய்யப்படாமலேயே வெளியானது.
படத்தில் அதிகப்படியான இடங்களில் ஆபாச வார்த்தைகள் பேசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இது படம் வெளியானபோதே சர்ச்சையை கிளப்பியது. இந்தநிலையில் இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், “இந்தப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள் ரொம்பவே மோசமானது” என்று கூறி இதுகுறித்து படத்தின் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி, நடிகர் ஜோஜு ஜார்ஜ் மற்றும் சென்சார் போர்டு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தப்படம் எங்களால் தணிக்கை செய்யப்படவில்லை என சென்சார் போர்டு ஏற்கனவே கூறியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.