இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் ஆர்ஆர்ஆர். வரும் ஜனவரி மாதம் பான் இந்தியா ரிலீஸாக இந்தப்படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்தப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் புரமோஷனுக்காக சென்னை, பெங்களூரு, மும்பை என மாறி மாறி பயணித்து புரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் கலந்துகொண்டு வருகின்றனர்.
அப்படி நேற்று பெங்களூருவில் நடைபெற்ற இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது சமீபத்தில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் பற்றி நெகிழ்ந்து போய் கண்கலங்க பேசினார் ஜூனியர் என்டிஆர். மேலும் கடந்த 2016ல் புனித் நடித்த 'சக்ரவியூகா என்கிற படத்திற்காக தான் பாடிய 'கேலய்யா கேலய்யா என்கிற பாடலை மேடையில் பாடிய ஜூனியர் என்டிஆர், இந்தப்பாடலை பாடுவது இதுவே முதலும் கடைசியும் ஆகும்” என்று கண்கலங்க கூறினார்.