இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவரும், பிரபலமான ராஜ்குமார் குடும்பத்து வாரிசுகளில் ஒருவருமான நடிகர் புனீத் ராஜ்குமார் கடந்த 2021ம் வருடம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் தனது 46வது வயதிலேயே மரணம் அடைந்தார். இது கன்னட திரையுலகிலும் ரசிகர்களிடமும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வரும் மார்ச் 14ம் தேதி அவரது ஐம்பதாவது பிறந்தநாளை முன்னிட்டு புனீத் ராஜ்குமார் கன்னடத்தில் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமான அப்பு திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்ய இருப்பதாக அவரது மனைவி அஸ்வினி தனது சோசியல் மீடியா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த 2002ல் புனீத் ராஜ்குமார் கதாநாயகனாக அறிமுகமாக முடிவு செய்த போது கன்னடத்தில் யாரையும் அழைக்காமல் தெலுங்கில் இருந்து பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத்தை அழைத்து வந்து அந்த படத்தை இயக்க வைத்தார்கள். படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று 200 நாட்கள் ஓடியது. ரக்ஷிதா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் கன்னடத்தில் வெற்றி பெற்ற சூட்டோடு சூடாக இதை தெலுங்கிலும் இடியட் என்கிற பெயரில் ரீமேக் செய்து இயக்கினார் பூரி ஜெகன்நாத். இந்த படம் தான் பின்னர் தமிழில் சிம்பு நடிக்க தம் என்கிற பெயரிலும் ரீமேக் ஆனது. இந்த மூன்று படங்களிலும் ரக்ஷிதா தான் கதாநாயகியாக நடித்திருந்தார் என்று என்பது குறிப்பிடத்தக்கது.