மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
தென்னிந்திய மாநிலங்களில் தெலுங்கிற்கு அடுத்ததாக அல்லு அர்ஜுனுக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கும் ரசிகர்கள் கேரளாவில் தான் இருக்கின்றனர். சொல்லப்போனால் கேரளாவில் செல்வாக்கு பெற்ற ஒரே தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தான். இந்த நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள புஷ்பா படத்தின் முதல் பாகம் இன்று (டிச-17) வெளியாகிறது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பஹத் பாசில் வில்லனாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கேரளாவில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் புஷ்பா படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன் பேசும்போது இந்த படத்தின் மிக முக்கியமான ஆக்ஷன் காட்சி ஒன்றை கேரளாவில் படமாக்கத்தான் திட்டமிட்டிருந்தோம். ஆனால் கோவிட் காரணமாக எங்களால் இங்கே வந்து படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது. இது படக்குழுவினரை விட எனக்கு ரொம்பவே வருத்தம் தந்தது என்று கூறியுள்ளார்.