தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஆதித்ய தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வந்த படம் துரந்தர். அவருடன் அக்சய் கண்ணா, சஞ்சய்தத், மாதவன், சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். 300 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை 21 நாளில் ரூ.1006.7 கோடி வசூலித்திருக்கிறது. இதில் இந்தியாவில் மட்டும் 789.18 கோடியும், உலகளவில் 217.5 கோடியும் அடக்கம். இந்த துரந்தர் படத்தின் இரண்டாம் பாகம் 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த துரந்தர் படத்தை நெட் பிளிக்ஸ் நிறுவனம் 285 கோடிக்கு வாங்கி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா -2' படத்தின் ஓடிடி உரிமை 270 கோடிக்கு விற்பனையான நிலையில், தற்போது அதைவிட துரந்தர் படம் அதிக தொகைக்கு விற்பனையாகி, இந்திய அளவில் இதுவரை ஓடிடியில் விற்பனையான படங்களில் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட முதல் படமாகியுள்ளது.




