தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
மலையாள நடிகர் சங்கத்திற்கு(அம்மா) 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன்படி 2022 - 2025ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் தலைவராக மோகன்லாலும், செயலாளராக எடவலா பாபுவும், பொருளாளராக சித்திக்கும், இணைச் செயலாளராக ஜெயசூர்யாவும் அவர்களை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போடியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.
ஆனால் துணைத் தலைவர்கள் பதவிக்கும், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கும் தேர்தல் நடந்தது. 2 துணை தலைவர் பதவிக்கு மோகன்லால் அணி சார்பில் நடிகைகள் ஸ்வேதா மேனனும், ஆஷா சரத்தும் போட்டியிட்டனர். அவர்களை எதிர்த்து நடிகை மணியம் பிள்ளை ராஜு போட்டியிட்டார். இதில் ஆஷா சரத் தோல்வி அடைய மற்ற இருவரும் துணை தலைவராக வெற்றி பெற்றார்கள்.
11 பேர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு பெற்றனர். இதில் டொவினோ தாமஸ், லால், பாபுராஜ், லேனா, மஞ்சு பிள்ளை, சுதீர் கரமனா, ரச்சனா நாராயண் குட்டி, சுரபி லட்சுமி, டினிடோம், உன்னி முகுந்தன், லால், விஜய் பாபு ஆகியோர் வெற்றி பெற்றனர். நிவின் பாலி, ஹனிரோஸ் தோல்வியடைந்தனர்.