ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
என்.டி.பாலகிருஷ்ணா நடித்த அகண்டா படம் அவரது முந்தைய சாதனைகளை முறியடித்து தற்போதும் ஓடிடி தளத்திலும், தியேட்டரிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் வரும் ஒரு காட்சியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது ஐதராபாத் போக்குவரத்து போலீஸ்.
என்.டி.பாலகிருஷ்ணாவும், படத்தின் நாயகி ஜெய்ஸ் வாலும் ஜீப்பில் சென்று கொண்டிருப்பார்கள். அப்போது ஒரு லாரி குறுக்கே வந்துவிட திடீர் என்று பிரேக் போடுவார் பாலய்யா. இதனால் பக்கத்து சீட்டில் இருக்கும் ஜெய்ஸ்வால் தலை காரின் முன்பகுதியில் போதும். அதனை தன் கை வைத்து தடுக்கும் பாலையா. முதலில் சீட் பெல்ட போட வேண்டும் என்பார்.
இந்த காட்சியை காரில் செல்வபர்கள் கட்டாயம் சீட் பெல்ட் போட வேண்டும் என்கிற விழிப்புணர்வுக்காக ஐதராபாத் போலீசார் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதோடு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்திய நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் இயக்குனர் போயபதி ஸ்ரீனு ஆகியோருக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு ஹெல்மெட் விழிப்புணர்வுக்கு புஷ்பா படத்தில் இடம்பெற்ற அல்லு அர்ஜுன் படத்தை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.