படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

மலையாள நடிகர் திலீப், நடிகை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறை சென்று, பின் ஜாமீனில் விடுதலையானார். இந்த நிலையில் அவர் மீது இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர் கூறிய சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என நினைத்து முன் ஜாமீன் கோரி விண்ணப்பித்தார் நடிகர் திலீப். இந்த மனுவின் மீதான விசாரணை ஒவ்வொரு முறையும் தள்ளி வைக்கப்பட்டு இதுவரை நான்கு முறை விசாரணை தள்ளிப்போய் உள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் போலீசார் முன்னிலையில் மூன்று நாட்களுக்கு திலீப் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அந்த விசாரணை அறிக்கை ஜனவரி 27 க்குள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அதுவரை அவரை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் திலீப்பிடம் மூன்று நாட்கள் விசாரணை முடிந்து அதன் அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து விசாரணை தரப்பு இன்னும் ஒரு வார கால அவகாசம் கேட்டுள்ளது. அதற்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்றம், வரும் பிப்ரவரி-2ல் பிறப்பின் முன் ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அதுவரை அவரை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.