திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் கோட்டயம் பிரதீப் இன்று(பிப்., 17) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 61. மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ் உள்ளிட்ட மலையாள பிரபலங்கள் பலரும் இவரது மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
20 ஆண்டுகளுக்கு முன்பு ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக சினிமாவில் நுழைந்த கோட்டயம் பிரதீப் அதைத்தொடர்ந்து நகைச்சுவை நடிகராக மாறி முன்னணி நடிகர்கள் அனைவரது படத்திலும் தவறாமல் இடம்பெற ஆரம்பித்தார். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் நகைச்சுவையில், குறிப்பாக வசன உச்சரிப்பில் தனக்கென ஒரு தனி பாணியை கடைபிடித்து ரசிகர்கள் மனதில் எளிதாக பதிந்தார்.
தமிழில் கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷாவின் கேரள உறவினராக நடித்திருந்தார் கோட்டயம் பிரதீப். அந்தப் படத்திற்கு பிறகு மலையாள திரையுலகில் அவரது மவுசு இன்னும் கூடியது. அதைத்தொடர்ந்து மீண்டும் தமிழில் தெறி படத்தில் கேரளாவில் விஜய் நடத்தும் பேக்கரியில் உதவியாளர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது நடித்துள்ள மோகன்லாலின் ஆராட்டு படம் நாளை வெளியாக உள்ளது.