மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
நடிக்கும் எண்ணமே இல்லாமல் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மோகன்லாலின் மகன் பிரணவ், பின்னர் எதிர்பாராத விதமாக நடிகராகி விட்டார். முதல் படம் வெற்றி, இரண்டாவது படம் தோல்வி, இதோ சமீபத்தில் வெளியான அவரது மூன்றாவது படமான ஹிருதயம் படம் மூலம் மீண்டும் வெற்றி என, வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்து வருகிறார் பிரணவ். இந்தப்படம் 50 கோடி வசூல் கிளப்பில் ஏற்கனவே இணைந்து விட்டது.
இந்தநிலையில் தற்போது இமயமலை பகுதியில் ஒரு பயணம் மேற்கொண்டுள்ளார் பிரணவ்.. அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். இப்போது மட்டும் அல்ல, தனது முதல் படமான ஆதி ரிலீசான சமயத்திலும் கூட இதேபோல இமயமலைக்கு பயணம் கிளம்பியவர் தான் பிரணவ். அநேகமாக இனி இதையே தனது பாணியாக கடைபிடிக்க ஆரம்பித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.