மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் | மீண்டும் காதல் கிசுகிசுவில் சிக்கிய தனுஷ் | அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? |
கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் கராச்சி 81 என்கிற படம் உருவாக இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. மலையாள சினிமா இதுவரை பெரிய அளவில் தொடாத உளவாளி சப்ஜெக்ட்டை மையப்படுத்தி இதன் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் கே.எஸ்.பாவா.
அதன்பிறகு நான்கு வருடங்கள் படத்தை பற்றிய தகவலே இல்லாமல் இருந்த நிலையில் கடந்த 2020 ஜனவரியில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டதுடன் இந்த படத்தில் டொவினோ தாமஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்றும் அறிவிப்பு வெளியானது. அதன்பிறகும் இரண்டு வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் இந்த படம் கைவிடப்பட்டதோ என்கிற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
இந்தநிலையில் இந்த படத்தின் டிஸ்கஷன் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக பிரித்விராஜ் டொவினோ தாமஸ், தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் ஆகியோருடன் இணைந்து லேட்டஸ்ட்டாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இயக்குனர் கே.எஸ்.பாவா.
இந்த வருடத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை துவக்குவதற்கு திட்டமிட்டுள்ளார்களாம் பாகிஸ்தானிலேயே சென்று இந்தப்படத்தின் படப்பிடிப்பை நடத்த முதலில் திட்டமிட்டு இருந்தவர்கள் தற்போதுள்ள சூழ்நிலை காரணமாக இந்திய எல்லை பகுதியிலேயே படப்பிடிப்பு நடத்தவும் முடிவு செய்துள்ளார்களாம்..