விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா | 'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான் | போட்டி ரிலீஸ் : பிரபாஸின் பெருந்தன்மை, ரசிகர்கள் பாராட்டு |

தமிழில் ராஜாராணி, நையாண்டி, என வெகு சில படங்களில் மட்டுமே நடித்த நஸ்ரியா, நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு தற்காலிகமாக விலகினார்.. தற்போது மீண்டும் நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் நஸ்ரியா, மலையாளத்தில் தனது கணவர் பஹத் பாசிலுடன் இணைந்து 'ட்ரான்ஸ்' என்கிற படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து 'அண்டே சுந்தரனிகி' என்கிற படம் மூலம் முதன்முறையாக தெலுங்கு திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
நானி கதாநயகனாக நடிக்கும் இந்தப்படத்தை 'மெண்டல் மதிலோ' புகழ் விவேக் ஆத்ரேயா என்பவர் இயக்கியுள்ளார். வரும் ஜூன்-10ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ளது.. இந்தநிலையில் இந்தப்படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ள நஸ்ரியா, இயக்குனர் பற்றியும் அவருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்தும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுபற்றி நஸ்ரியா கூறும்போது, “இன்று என்னுடைய டப்பிங் பணிகளை முடித்துவிட்டேன்.. இயக்குனர் விவேக் ஆத்ரேயாவை போல இந்த பயணம் முழுவதும் ஒரு சிறந்த வழிகாட்டியை நான் பெற்றிருக்க முடியாது. ஒரு அற்புதமான மனிதராக இருந்து, சிறந்த நண்பராக மாறிய உங்களுடன் ஒவ்வொரு நாளும் வேலை செய்வதை நான் விரும்பினேன். கடந்த ஒரு வருடமாக நீண்ட இந்த பயணத்தில். நாம் வெகுதூரம் வந்துவிட்டோம்.. இனி அடுத்த முறை பார்க்கும் வரை உங்கள் அனைவரையும் மிஸ் பண்ணுவேன் " என்று கூறியுள்ளார் நஸ்ரியா.