2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் |

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவிக்கு வந்தபிறகு தெலுங்கு சினிமா மீது மிகப்பெரிய அளவில் கரிசனம் காட்டாமல் கடுமையான நடைமுறைகளை அமல்படுத்தி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட தியேட்டர் கட்டணங்களை அதிரடியாக குறைத்து உத்தரவிட்டார். பின்னர் இதனால் தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர் என திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் ஒன்றாக சேர்ந்து அவரிடம் கோரிக்கை வைத்ததும் தியேட்டர் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அனுமதித்தார்.
அதுமட்டுமல்ல தியேட்டர்களில் டிக்கெட் கட்டணங்களில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் விதமாக ஆன்லைன் டிக்கெட் புக்கிங் முறையை அரசு செயல்படுத்தும் என்றும் அறிவித்திருந்த ஜெகன் மோகன் ரெட்டி வரும் ஏப்ரல் முதல் அதை நடைமுறைப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். அதனால் இந்த ஆன்லைன் டிக்கெட் புக்கிங் முறையை செயல்படுத்துவதற்கான டெண்டரை எடுப்பதற்காக பல நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளன.
குறிப்பாக அல்லு அர்ஜுனின் சகோதரரான அல்லு வெங்கடேஷ் என்பவர் தனது கம்பெனி சார்பாக இதற்கான டெண்டரை கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்த டெண்டர் இவருக்குத்தான் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேசமயம் இதுவரை ஆன்லைன் புக்கிங் முறையில் அதிக கட்டணம் வசூலித்து கோடிகளில் கொடிகட்டி பறந்த ஒரு சில டிக்கெட் புக்கிங் நிறுவனங்கள் இந்த டெண்டரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக்கொண்டன என்றும் சொல்லப்படுகிறது..