இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட்' படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக இந்தப்படத்தில் நடிப்பதன் மூலம் முதன்முதலாக தமிழ் திரையுலகில் நுழைந்துள்ளார் மலையாள வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ.. அதேசமயம் தீவிரவாதிகள் கூட்டத்தில் ஒருவராக வெறும் ஐந்து நிமிடங்கள் வந்துபோகும் அளவுக்கு மட்டுமே அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் எதுவும் இல்லாமல் உருவாக்கப்பட்டு இருந்தது மலையாள ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பெரிய நடிகர் படம் என்றாலும் இதுபோன்ற முக்கியத்துவம் இல்லாத சின்ன வேடங்களில் இனி நடிக்க வேண்டாம் என்பது போன்று ரசிகர்கள் பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்.
மலையாளத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஷைன் டாம் சாக்கோ, ஆரம்பத்தில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார்.. பின்னர் இதிகாசா என்கிற வெற்றிப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர், இன்னும் சில படங்களில் கூட கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்ல. சமீபத்தில் வெளியான பீஷ்ம பர்வம் படத்தில் கூட மம்முட்டிக்கு சமமான முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படிப்பட்ட நடிகரை தமிழுக்கு அழைத்து வந்து முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து அவரை வீணடித்து விட்டார்களே என்பது தான் மலையாள ரசிகர்களின் ஆதங்கமாக வெளிப்பட்டுள்ளது...