இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
விஸ்வ சாந்தி என்ற அறக்கட்டளை மூலமாக கேரளாவில் தொடர்ந்து தன்னார்வ சேவைகளில் ஈடுபட்டு வருகிறார் நடிகர் மோகன்லால். இந்நிலையில் பழங்குடியினர் பகுதியில் 20 பிள்ளைகளை தேர்வு செய்து அவர்களுக்கு கல்வி மற்றும் பிற உதவிகளை வழங்கும் திட்டத்தை தொடங்கி உள்ளார் மோகன்லால். அந்த திட்டத்திற்கு விண்டேஜ் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த திட்டம் அட்டப்பாடியில் இருந்து தொடங்கப்பட்டது. கிராமங்களிலிருந்து 20 ஆதிவாசி பழங்குடியினர் குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். இவர்களுக்கு அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப கல்வி அளிக்கப்படும். அவர்களது விருப்பங்கள் லட்சியங்கள் பூர்த்தி செய்ய உதவப்படும் என்று உத்தரவாதம் கொடுத்துள்ளார் மோகன்லால்.
தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட 20 ஆதிவாசி பிள்ளைகளின் 15 ஆண்டு படிப்பு மற்றும் அது தொடர்பான செலவுகள் உள்ளிட்டவற்றை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து மோகன்லால் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், இந்த பதினைந்து வருடங்களில் குழந்தைகளுக்கு பெற்றோராகவும், ஆசிரியராகவும் எப்போதும் இருப்பேன். தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் இது போன்று குழந்தைகளை தத்தெடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் நடிகர் மோகன்லால்.