படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

மகேஷ்பாபு நடிப்பில் பரசுராம் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் வரும் மே மாதம் வெளியாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் தனது பணிகளை முடித்துக் கொடுத்துவிட்ட மகேஷ்பாபு தனது குடும்பத்துடன் ஜாலியாக துபாய்க்கு டூர் கிளம்பியுள்ளார். சமீபத்தில் அவர் தனது குடும்பத்துடன் துபாய் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகின.
இந்த நிலையில் இன்னும் சில தினங்களில் இயக்குனர் ராஜமவுலியும் தனது குடும்பத்துடன் துபாய்க்கு டூர் கிளம்ப இருக்கிறார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. மகேஷ்பாபுவின் அடுத்த படத்தை இயக்குனர் ராஜமவுலி தான் இயக்குகிறார் என்பது ஏற்கனவே அதிகாரபூர்வமாக வெளியான தகவல். இந்தநிலையில் இந்த புதிய படத்தின் கதை குறித்து துபாயில் மகேஷ்பாபுவுடன் விவாதிப்பதற்காக ராஜமவுலியும் துபாய் கிளம்பி செல்கிறார் என்று அவரது பயணத்திற்கான காரணமாக சொல்லப்படுகிறது.