ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கு திரையுலகை பொறுத்தவரை சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் என மூன்று கலை குடும்பங்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதில் அதிக அளவு செல்வாக்கு கொண்ட குடும்பமாக நடிகர் சிரஞ்சீவியின் குடும்பம் திகழ்கிறது. சிரஞ்சீவியின் குடும்பத்திலிருந்து அவரது தம்பிகளான பவன் கல்யாண், நாக பாபு, சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் மற்றும் சிரஞ்சீவியின் சகோதரிகளின் மகன்கள், சிரஞ்சீவியின் மைத்துனர் மகனான அல்லு அர்ஜுன், அல்லு சிரிஷ் என பலர் தெலுங்கு திரையுலகில் நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் அனைவருடனும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் சிரஞ்சீவி.
இதுகுறித்து அவர் கூறும்போது, ஒரு முறை ருத்ரவீணா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான நர்கீஸ் தத் விருது சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டது. இதை பெறுவதற்காக அவர் மும்பை சென்றபோது அந்த விழாவில் தான் ஏதோ ஒரு புதிய நடிகர் போல அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்துள்ளார் சிரஞ்சீவி.
அந்த விழாவில் பாலிவுட்டை சேர்ந்த கபூர் குடும்பத்தின் ஆதிக்கம்தான் மேலோங்கி இருந்ததாகவும் பின்னர் தனது தம்பி பவன் கல்யாணிடம் ஒருமுறை சிரஞ்சீவி கூறும்போது தென்னிந்தியாவின் கபூர் குடும்பம் போல நம் குடும்பம் திகழ வேண்டும் என தான் விரும்புவதாக கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார் நடிகர் சிரஞ்சீவி.