இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ், தெலுங்கில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரோஜா. இயக்குனர் ஆர்கே செல்வமணியைத் திருமணம் செய்து கொண்ட பின் சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி தீவிர அரசியலில் இறங்கினார்.
சென்னைக்கு அருகில் உள்ள ஆந்திர மாநில நகரி சட்டசபைத் தொகுதி எம்எல்ஏ.,வாக இருக்கும் ரோஜா, சமீபத்தில் ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அமைச்சரான பின் ஹைதராபாத்தில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ், மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோரை தனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நடிகர் சிரஞ்சீவியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அது குறித்து, “நான் சினிமாவிலிருந்து விலகியதற்கும், ஆந்திர மாநில அமைச்சரானதற்கும் சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்தார். அவரது குடும்பத்தினரை சந்தித்தது மகிழ்ச்சி. சுரேகா (சிரஞ்சீவி மனைவி) அவர்களுக்கு சிறப்பு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிரஞ்சீவி, ரோஜா இருவரும் இணைந்து 'முட்டா மேஸ்திரி (1993), முக்குரு மொங்கலு (1994), பிக் பாஸ் (1995) ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.