தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மலையாள திரையுலகில் தொண்ணூறுகளில் மும்மூர்த்திகள் என சொல்லப்பட்டவர்கள் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி. ஆனால் மோகன்லாலும் மம்முட்டியும் மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வில் பலவித பொறுப்புகள் வகித்து ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர்.. ஆனால் 90களில் வெளிநாட்டிற்கு சென்று கலை நிகழ்ச்சி நடத்துவதில் சுரேஷ்கோபிக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக நடிகர் சங்கம் சம்பந்தமான எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதை சுரேஷ்கோபி தவிர்த்து வந்தார்.
குறிப்பாக நடிகர் சங்கம் பக்கமாக கடந்த 20 வருடமாக அவர் வரவே இல்லை. இந்த நிலையில் தனது மனக்கசப்புகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு உழைப்பாளர் தினமான மே 1ஆம் தேதி நடிகர் சங்கத்திற்கு வருகை தந்தார் சுரேஷ்கோபி. 20 வருடம் கழித்து நடிகர் சங்கத்திற்கு வருகை தந்த அவரை சங்க உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி உற்சாகமாக வரவேற்றனர். இந்த நிகழ்வில் வில்லன் நடிகர் பாபுராஜ், நடிகை ஸ்வேதா மேனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.