இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
தமிழகத்தைச் சேர்ந்தவர் தான் என்றாலும் தற்போது தெலுங்கு திரையுலகத்திற்கு சொந்தக்காரராக மாறி முன்னணி இசையமைப்பாளராக கோலோச்சிக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் தமன். ஒவ்வொரு படத்திலும் குறைந்தபட்சம் ஒரு சூப்பர்ஹிட் பாடலையாவது கொடுத்து ரசிகர்களின் இசையமைப்பாளராக வலம்வரும் தமன், இன்னொரு பக்கம் சின்னத்திரையில் தெலுங்கு இந்தியன் ஐடல் என்கிற பாடல் போட்டிக்கான ரியாலிட்டி ஷோவின் ஜட்ஜ் ஆகவும் பங்கு பெற்று வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த போட்டியில் கலந்துகொண்ட ரேணுகுமார் என்பவர் தனது அற்புதமான குரல் வளத்தால் தமன், இன்னொரு ஜட்ஜான நடிகை நித்யா மேனன் மற்றும் பார்வையாளர்கள் அனைவரையும் வசீகரித்தார். மேலும் அவர் மேடையில் பேசும்போது கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக வருமானம் இல்லாமல் போய்விட்டது என்றும் தனது மகனின் படிப்பு செலவுக்கு கூட சிரமப்படுவதாகவும் கண்கலங்க தெரிவித்தார்.
இதைக்கேட்டதும் உடனே மகனின் படிப்பு பற்றி கவலைப்பட வேண்டாம் இனி வருகின்ற அவரது 3 வருடத்திற்கான படிப்பு செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று மேடையிலேயே உறுதி கொடுத்து ரேணுகுமாரை மட்டுமல்ல அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்தார் இசையமைப்பாளர் தமன்.