பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நடிகை சாய்பல்லவி தான் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் படங்களையும் தியேட்டருக்கு சென்று ரசிகர்களோடு ரசிகராக படம் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். தெலுங்கில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள சர்க்காரு வாரி பாட்டா என்ற படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்து ரசித்துள்ளார் சாய்பல்லவி. ஆனால் அப்படி செல்லும்போது ரசிகர்கள் தன்னை அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக மாஸ்க் அணிந்தபடி தனது தலையில் ஒரு துணியை போட்டு முகத்தை மறைத்தபடி தியேட்டருக்குள் சென்ற சாய்பல்லவி திரும்பி வரும்போதும் முகத்தை மறைத்தபடியே ரசிகர்களின் கண்ணில் சிக்காமல் வெளியே வருகிறார். அதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் தெலுங்கில் ராணாவுடன் இணைந்து நடித்துள்ள விராட பருவம் மற்றும் தமிழில் நடித்துள்ள கார்கி ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் சாய்பல்லவி.