தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
மலையாள திரையுலகின் இளம் முன்னணி நடிகர் பிரித்விராஜ். இவரது மனைவி சுப்ரியா மேனன். மும்பையில் பத்திரிக்கை நிருபராக பணிபுரிந்த இவரை ஒரு பேட்டியின்போது சந்தித்த பிரித்திவிராஜ், இவருடன் காதலில் விழுந்து பின்னர் திருமணமும் செய்து கொண்டார். பிரித்விராஜ் பிசியான நடிகராகவும், இயக்குனராகவும் மாறிவிட்ட நிலையில் சுப்ரியா மேனன் பிரித்விராஜ் புரடக்சன் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சுப்ரியா, மறைந்த தனது தந்தை குறித்து சமீபத்தில் சோகமான பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். இதற்கு நெட்டிசன் ஒருவர் எதற்கு சோசியல் மீடியாவை இப்படி சோகமான பதிவுகளுக்கு பயன்படுத்துகிறீர்கள்..? இப்படி பதிவிடுவதால் உங்கள் தந்தை வந்துவிடப் போகிறாரா என்ன என கேள்வி எழுப்பி இருந்தார்.
அவரது கேள்விக்கு கொஞ்சமும் கோபப்படாமல், “இன்னும் இதுபோன்ற சூழ்நிலையை நீங்கள் சந்தித்திருக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். சோசியல் மீடியா என்பது சந்தோஷத்தை மட்டும் பகிர்ந்து கொள்வதற்கு அல்ல.. உங்களுக்கு இப்படிப்பட்ட பதிவுகள் பிடிக்கவில்லை என்றால் கமெண்ட் செய்வதற்கு பதிலாக, என்னை பின்தொடர்வதை நிறுத்திவிட்டு வேறு வேலையைப் பார்க்க போகலாம்.. எதற்காக நேரத்தை வீணாக செலவிடுகிறீர்கள்” என்று நாகரிகமாக பதிலடி கொடுத்துள்ளார். அவரது இந்த பதிலுக்கு வரவேற்பு கிடைத்துள்ளதுடன் அப்படி கேள்வி கேட்ட நபரையும் மற்ற நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர்.