இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஆனால் தெலுங்கில் 90களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் டாக்டர் ராஜசேகர். தற்போதும் அவர் ஹீரோவாகத்தான் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஜோசப் என்கிற படத்தின் ரீமேக்கில் நடித்தார் ராஜசேகர். சேகர் என டைட்டில் வைக்கப்பட்ட இந்த படத்தை அவரது மனைவி ஜீவிதா இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியானது.
இந்த படம் வெளியாவதற்கு சிலநாட்கள் முன்னதாக ராஜசேகர் மீதும் அவர் மனைவி ஜீவிதா மீதும் பைனான்சியர் ஒருவர் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் சேகர் படம் வெளியாவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட பைனான்சியருக்கு அவரது பணத்தை செட்டில் செய்வதாக ராஜசேகர் ஜீவிதா தம்பதியினர் கூறியிருந்தனர் ஆனால் பணத்தை செட்டில் செய்யாமலேயே படத்தை ரிலீஸ் செய்து விட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பைனான்சியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவே தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் சேகர் படத்தை ஞாயிறு மதியம் முதல் மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து டாக்டர் ராஜசேகர் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் இந்த படம் எனது வாழ்க்கையில் மிக முக்கியமான படம். ரசிகர்களிடம் இதற்கு பாசிட்டிவான வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. விரைவில் இந்த படம் மீண்டும் ரசிகர்களின் பார்வைக்கு வரும் என நம்புகிறேன் என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.