நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
மலையாள திரையுலகில் குணசித்திர நடிகரும் பிரபல தயாரிப்பாளருமான விஜய்பாபு கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாள நடிகை ஒருவரால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானார். தனது படங்களில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக விஜய்பாபு பலாத்காரம் செய்து விட்டார் என்று நடிகை புகார் அளித்ததன் பேரில் விஜய்பாபு மீது வழக்கு தொடரப்பட்டது. இதனைத்தொடர்ந்து விஜய்பாபு வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளார். அதேசமயம் அவர் அங்கிருந்தபடியே இங்கே முன்ஜாமீன் பெறுவதற்கு முயற்சித்து வருகிறார்.
விஜய்பாபுவின் வழக்கறிஞர் நீதிபதியிடம் விஜய்பாபுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும் வியாழன், வெள்ளியில் இந்த வழக்கை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். அதை கேட்ட நீதிபதி முதலில் விஜய்பாபு இந்தியாவுக்கு எப்போது திரும்புகிறார் என்பதற்கான ரிட்டர்ன் டிக்கெட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யட்டும். அதன்பிறகு அவருக்கு முன்ஜாமீன் கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் நிபந்தனை விதித்தார். அதேசமயம் இந்த வழக்கில் விஜய்பாபுவுக்கு எப்படியும் முன்ஜாமீன் கிடைத்துவிடும் என்பதால் அதற்கு முன்பாகவே அவரை கைது செய்வதற்கு போலீசார் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனராம்.