தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் ரக்ஷித் ஷெட்டி. இவரது நடிப்பில் கடந்த வெள்ளியன்று ‛சார்லி 777' என்கிற படம் வெளியானது. பாபி சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் நாய்க்கும் மனிதனுக்குமான பாசப்பிணைப்பை மையப்படுத்தி உருவாகியுள்ளது. குறிப்பாக ஒரு நாயின் ஆசை என்னவாக இருக்கும் என்று அதை வளர்க்கும் மனிதன் உணர்ந்து பல சிரமங்களுக்கு இடையே அந்த ஆசையை நிறைவேற்றி வைக்க முயற்சி எடுக்கும் மனிதாபிமானம் பற்றி இந்த படம் பேசியிருந்தது.
இந்த படத்தை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பார்த்தார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது அவரது கண்கள் கலங்கி இருந்தன. மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த படம் கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை என்னுடைய செல்ல பிராணியாக நான் வளர்த்த சன்னி என்கிற நாயை நினைவுபடுத்தியது. நாய்க்கும் மனிதனுக்குமான அன்பு எந்தவித எல்லையும் இல்லாதது. இந்த படத்தைப் பார்த்ததும் தெரு நாய்களை தத்தெடுத்து பராமரித்து பாதுகாக்கும் முயற்சியை எடுத்து இருக்கிறேன். அதேபோல நாய் பயிற்சியாளர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக சில திட்டங்களை அறிவிக்க முடிவு செய்துள்ளேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை.