ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கொரோனா தொற்று காரணமாக திரைப்படத்துறை பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது சினிமாத்துறை முன்பைவிட அதிக வேகத்தில் வசூலை குவித்து வருகிறது. தெலுங்கு சினிமாவில் புஷ்பா, ஆர்ஆர்ஆர் படங்கள் கோடிகளை குவித்தது. கொரோனா காலத்தில் சம்பள உயர்வு எதையும் தொழிலாளர்கள் பெறவில்லை.
சினிமா தொழிலாளர்களுக்கு 3 வருடத்துக்கு ஒரு முறை ஊதியம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த 4 வருடங்களாக தெலுங்கு சினிமாவில் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. தற்போது சினிமாவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாலும், விலைவாசி உயர்வு காரணமாகவும் தங்களுக்கு சம்பளத்தை உயர்த்தி தரவேண்டும் என்று தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள் கூறிவந்தனர்.
இந்நிலையில், தெலுங்கு திரைப்படத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி, இன்று (ஜூன் 22) முதல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் தெலுங்கு படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதோடு, ஐதராபாத்தில் நடந்து வரும் தமிழ் படத்தின் படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது.