படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

மலையாள சினிமாவின் சாக்லேட் ஹீரோவாக இப்போதும் ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் குஞ்சாக்கோ போபன் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் படங்களில் ஒன்று தான் ''நின்ன தான் கேஸ் கொடு''. இந்தப்படத்தில் நாயகியாக நடிக்கிறார் விஜய்சேதுபதியின் ஆஸ்தான நாயகியான காயத்ரி. மலையாளத்தில் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற ஹிட் படத்தை இயக்கிய ரதீஷ் பாலகிருஷ்ணன் தான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்திற்காக தனது தோற்றத்திலும் பேசும் வித்தியாசமான மலையாள பாஷையிலும் என புதிய ஒரு ஆளாகவே மாறிவிட்டார் குஞ்சாக்கோ போபன். இந்த படப்பிடிப்பின்போது வீடியோ காலில் தனது மகனுடன் பேசியபோது தன்னை அவனால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை என்று பெருமையுடன் இந்த கதாபாத்திரம் பற்றி சமீபத்தில் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்ல இந்த படத்தின் இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன் தான் இயக்கிய ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் கதையை முதலில் தன்னிடம் தான் வந்து கூறினார் என்றும் ஆனால் அந்த கதையை தன்னால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை என்பதால் அந்த படத்தை நடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டு விட்டதாகவும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார் குஞ்சாக்கோ போபன்.
அந்த படம் ஹிட்டானதை தொடர்ந்து இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணனை அழைத்த குஞ்சாக்கோ போபன், “ஏண்டா துஷ்டா.. என்னிடம் கதையை ஒழுங்காக கூறாமல் இப்படி ஒரு நல்ல படத்தை என்னிடமிருந்து பறித்து விட்டாயே” என்று செல்லமாக அவரை கடிந்து கொண்டதுடன் அடுத்த படத்தின் கதையை தயார் செய்து வா நான் தான் நடிப்பேன் என்று செல்லமாக கண்டிஷனும் போட்டு அதன்படி தற்போது நடித்து வரும் படம் தான் இந்த படம்” என்றும் கூறி உள்ளார் குஞ்சாக்கோ போபன்.