இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாள திரையுலகில் தயாரிப்பாளரும் நடிகருமான விஜய்பாபு மீது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அடித்துத் துன்புறுத்தியதாகவும் துணை நடிகை ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், வெளிநாட்டிற்குச் சென்று கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் தலைமறைவாக இருந்த விஜய்பாபு பின்னர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி கேரளா திரும்பினார். தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் ஆஜரான அவர், சமீபத்தில் கைது செய்யப்பட்டு, பின் ஜாமினிலும் விடுவிக்கப்பட்டார்.
அதேசமயம் அவர் ஜூன் 27 முதல் ஜூலை 3ஆம் தேதி வரை தினசரி போலீசாரின் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை அடுத்து போலீசார் அவரை தடயங்கள் சேகரிப்பதற்காக புகாரில் கூறப்பட்ட நிகழ்வுகள் நடந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர். இது ஒரு பக்கமிருக்க விஜய்பாபுவின் ஜாமீனை ரத்து செய்யும் விதமாக உச்ச நீதிமன்றத்தை நாட கேரள அரசு முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
காரணம் இது வழக்கமான பாலியல் பலாத்கார வழக்கு என்றால் பெரிய அளவில் கேரள அரசிடம் இருந்து ரியாக்சன் இருந்திருக்காது. ஆனால் விஜய்பாபுவோ லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பும் அளவுக்கு போலீசாருக்கு சவால் விடும் விதமாக வெளிநாட்டிற்கு தப்பிச் சென்று கண்ணாமூச்சி ஆடினார். அவரை கைது செய்ய முடியாமல் போலீஸார் கையை பிசைந்தது கேரள அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் விஜய்பாபு மீது கோபத்தில் இருக்கும் கேரள அரசு தற்போது இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.