துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி, அந்த பந்தா எதுவும் இல்லாமல் சக நடிகர்களுடன் ரொம்பவே தோழமையுடன் பழகி வருபவர். குறிப்பாக தற்போதைய இளம் நடிகர்கள், தாங்கள் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு அழைத்தால் கூட, எந்தவித மறுப்பும் சொல்லாமல் விழாக்களில் கலந்து கொண்டு அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். இன்னொரு பக்கம் திரையுலகை சேர்ந்தவர்களின் குடும்ப விசேஷங்களிலும் தவறாது கலந்து கொண்டு வருகிறார்.
அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் மிகவும் சீனியர் நடிகரான கைகலா சத்தியநாராயணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டிற்கே சென்று அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். கிட்டத்தட்ட கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கைகலா சத்திய நாராயணாவுடன் பல படங்களில் சிரஞ்சீவி இணைந்து நடித்துள்ளார். அதுமட்டுமல்ல, அவரது ஒவ்வொரு பிறந்த நாளிலும் அவரது வீட்டிற்கு சென்று அவரது பிறந்தநாளை கொண்டாடுவதை வழக்கமாகவும் வைத்திருக்கிறார். சிரஞ்சீவி கட்டும் இந்த அன்பினால் சத்திய நாராயணாவின் குடும்பத்தினர் நெகிழ்ந்து போய் உள்ளனர்.