திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கடந்த ஒரு வருடமாகவே பான் இந்தியா என்கிற வார்த்தை தென்னிந்திய திரையுலகில் மட்டுமல்ல, பாலிவுட்டையும் சேர்த்து ஆட்டி வைத்து வருகிறது. ஹிந்தி படங்கள் தென்னிந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாவதும், அதேபோல தென்னிந்திய படங்கள் பாலிவுட்டில் வெளியாவதும் என பல இயக்குனர்கள் மற்றும் ஹீரோக்கள் பான் இந்தியா படங்களில் நடிப்பதை விரும்புகின்றனர். இந்த நிலையில் பான் இந்தியா என்பதையும் தாண்டி உலக அளவில் செல்லுங்கள் என தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் மலையாள நடிகர் குஞ்சாக போபன்.
குஞ்சாக்கோ போபன் மலையாளத்தில் நடித்த அறிவிப்பு என்கிற படம் தற்போது லோகர்னோவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் கலந்து கொண்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக லோகர்னோ வந்துள்ள குஞ்சாகோ போபன் இது குறித்து கூறும்போது, “எனது 25 வருட திரையுலக பயணத்தில் முதன்முறையாக ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல இனி பான் இந்தியா என்பதை விட 'கோ குளோபல்' என்று அனைவரும் ஆசைப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார் குஞ்சாகோ போகன்.