போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் திரிஷ்யம் 2 என்கிற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது திரிஷ்யம் 3 படப்பிடிப்பு துவங்கி முடிவடைந்து போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் சம்மர் விடுமுறைக்கு இந்த படம் வெளியாக இருக்கிறது.
இந்த மூன்றாம் பாகம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறும்போது, “இந்த மூன்றாம் பாகம் முதல் பாகத்தின் பார்முலாவிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகம் ஒரு கதை சொல்லும் பாணியில் நகர்த்தி செல்லப்பட்டது. ஆனால் முதல் பாகத்தில் நிகழ்வுகள் மட்டுமே சொல்லப்பட்டன. அதே பார்முலாவில் தான் இந்த மூன்றாம் பாகமும் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை விட இன்னும் கூடுதல் எமோஷனாக இந்த மூன்றாம் பாகம் இருக்கும். இரண்டு பாகங்களில் நடந்ததை விட நாயகன் ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தில் வேறு என்ன நடந்துவிட முடியும் என்பதை தான் இந்த படத்தில் காட்டி இருக்கிறோம்” என்று கூறியுள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.