தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் இவர் நடிப்போடு அரசியல் மற்றும் சமூக சேவைகளில் ஈடுபாடு கொண்டவர். தனது சமூக பணிகளில் ஒரு பகுதியாக கர்நாட மாநிலத்தில் உள்ள 31 மாவட்டங்களுக்கும் 31 ஆம்புலன்ஸ் வழங்கும் திட்டத்தை தொடங்கி உள்ளார்.
இந்த ஆம்புலன்ஸ்களுக்கு மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரை நினைவுகூறும் விதமாக அவரின் செல்லப்பெயரை கொண்டு அப்பு எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி மைசூரு மிஷன் மருத்துவமனையில் நடந்தது.
பிரகாஷ்ராஜ் பேசியதாவது: ‛‛நூற்றாண்டுக்கும் மேலாக ஏழைகளுக்காகச் சேவை செய்து வரும் மிஷன் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வழங்குவதை பெருமையாக கருதுகிறேன். கர்நாடக மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை செயல்பட வேண்டும் என்பதே எனது கனவு. இதற்காக நிதி திரட்டவும் தயங்க மாட்டேன். இந்த வளாகத்தில் ரத்த வங்கி ஒன்று தொடங்கவும் திட்டம் வைத்திருக்கிறேன்'' என்றார்.