'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
ஹிந்தியில் ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன், நாகார்ஜூனா, ஆலியா பட் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரா. இந்தபடம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோஹர் இந்தப்படத்தை தயாரித்துள்ளார். பான் இந்தியா படமாக வெளியாக இருக்கும் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தென்னிந்தியாவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் ஐதராபாத்தில் உள்ள மால் ஒன்றில் நேற்று இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. ஆனால் முறையான அனுமதி பெறவில்லை என்கிற காரணத்தை கூறி, அங்கே நிகழ்ச்சியை நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் கடைசி நேரத்தில் அந்த நிகழ்ச்சி கேன்சலானதால் கூடியிருந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் களைந்து சென்றனர்.
அந்த நிகழ்ச்சி ரத்தானதை தொடர்ந்து, நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்த படத்தின் பிரஸ்மீட்டை நடத்தினர் பிரம்மாஸ்திரா படக்குழுவினர். இந்த நிகழ்வில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பொதுவெளியில் இன்று திட்டமிட்டபடி புரமோஷன் நிகழ்ச்சியை நடத்த முடியாமல் ரத்தானதற்கு, ரசிகர்களிடம் ஜூனியர் என்டிஆர் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார்.