நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
தென்னிந்திய மொழி படங்களிலேயே கமர்ஷியலாகவும் வியாபார ரீதியாகவும் ஒரு குறுகிய வட்டத்திலேயே பின்தங்கி இருந்தது என்றால் அது கன்னட திரையுலகம் மட்டும்தான். இந்தநிலையில் பான் இந்தியா படமாக வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் கன்னட திரையுலகை நோக்கி தென்னிந்திய ரசிகர்களின் பார்வையை மட்டுமல்ல பாலிவுட் திரையுலகையே சேர்த்து திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இந்த நிலையில் அதை மேலும் வலுப்படுத்தும் விதமாக கடந்த செப்டம்பர் 30ம் தேதி கன்னடத்தில் வெளியான காந்தாரா என்கிற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ரிஷப் செட்டி என்பவர் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் வெளியாகும்போது சாதாரண படம் என்கிற அளவில் தான் வெளியானது. ஆனால் படம் வெளியான நாளிலிருந்தே இந்த படத்திற்கான பாசிட்டிவ் விமர்சனங்களும் படம் பார்த்தவர்களின் ஆச்சரிய கருத்துக்களும் இந்த படத்திற்கான எல்லையை தற்போது விரிவுபடுத்தி உள்ளன.
அந்த வகையில் இந்த படத்தை தமிழ் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உரிமைகள் விற்கப்பட்டுள்ளன. மலையாளத்தில் இந்த படத்தை நடிகர் பிரித்விராஜ் வெளியிடுவதாக அறிவித்திருக்கிறார். அதேசமயம் தெலுங்கில் இந்த படத்தின் டப்பிங் உரிமையை பெற்றுள்ள பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், இதன் பணிகளை வேகமாக முடுக்கி விட்டுள்ளார். மேலும் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்