ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் உள்ள நடிகர் திலீப், கடந்த சில வருடங்களாக நடிகை கடத்தல் வழக்கு தொடர்பாக பல சோதனைகளை சந்தித்து வந்தாலும் திரையுலகை பொறுத்தவரை அவரது மார்க்கெட் ஸ்டெடியாகவே உள்ளது. வழக்கு விசாரணைகள் ஒரு பக்கம் இருந்தாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் திலீப். இந்த நிலையில் அவர் ஏற்கனவே தனக்கு ராம்லீலா என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் அருண் கோபியுடன் மீண்டும் இணைந்து தனது 147வது படத்தில் தற்போது பணியாற்றி வருகிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் நடிகை தமன்னா முதன்முதலில் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் சரத்குமார், ஈஸ்வரி ராவ், விடிவி கணேஷ் உள்ளிட்ட தமிழ் நட்சத்திரங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தற்போது திலீப்பின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படத்திற்குப் 'பாந்த்ரா' என டைட்டில் வைக்கப்பட்டு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்படம் மும்பை பின்னணியில் நடைபெறும் கேங்ஸ்டர் பாணியிலான படமாக தயாராகிறது என்றும் சொல்லப்படுகிறது.