இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்கின் முன்னணி நடிகர் என்.டி.பாலகிருஷ்ணாவின் புதிய படம் பூஜையுடன் நேற்று தொடங்கியது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. என்பிகே 108 என்று தற்காலிக தலைப்பு வைத்துள்ளனர். இது அவரது 108வது படமாகும்.
தெலுங்கு முன்னணி இயக்குநரான அனில் ரவிபுடியின் இயக்கத்தில் தயாராகும் இந்த படத்திற்கு. சி.ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, எஸ். தமன் இசையமைக்கிறார். ஷைன் ஸ்க்ரீன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சாஹூ கரபதி மற்றும் ஹரிஷ் பெடி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்த படத்தின் தொடக்க விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கிளாப் போர்டு அடிக்க, பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். முதல் காட்சிக்கு பிரபல இயக்குநர் கே. ராகவேந்திரா ராவ் கவுரவ இயக்குநராக பணியாற்றினார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நவீன் யெர்னேனி, கிலாரு சதீஷ் மற்றும் தயாரிப்பாளர் சிரிஷ் ஆகியோர் படத்தின் திரைக்கதையை தயாரிப்பாளரிடம் ஒப்படைத்தனர்.
இதன் படப்பிடிப்பு, சண்டை காட்சிகளுடன் தொடங்கியது. கலை இயக்குநர் ராஜீவன் மேற்பார்வையில் பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு, சண்டைக் காட்சிகள் படமாக்கப்படுகிறது. இந்தப் படத்தில் இதுவரை திரையில் தோன்றிராத புதிய தோற்றத்தில் பாலகிருஷ்ணா நடிக்கிறார். இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை ஸ்ரீ லீலா நடிக்கிறார்.