படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

மலையாள சினிமாவின் முக்கியமான இயக்குனர் கே.பி.சசி. கார்டூனிஸ்டாக வாழ்க்கை தொடங்கியவர் பிறகு டாக்குமெண்டரி படங்களை இயக்கினார். 1994ம் ஆண்டு வெளியான 'இலையும் முள்ளும் படத்தின் மூலம் திரைப்பட இயக்குனராகி பிரபலமானார். இப்படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
2003ம் ஆண்டு பாலிவுட் திரைப்படமான 'ஏக் அலக் மௌசம்' படத்தை இயக்கினார். இப்படத்தில் நந்திதா தாஸ், அனுபம் கேர் மற்றும் ரேணுகா ஷஹானே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
64 வயதான கே.பி.சசி கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.