தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மலையாளத்தில் நேரம், பிரேமம் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், கிட்டத்தட்ட 7 வருட இடைவெளிக்குப் பிறகு கோல்ட் என்கிற படத்தை இயக்கி சமீபத்தில் வெளியிட்டார். பிரித்விராஜ், நயன்தாரா என்கிற புதிய காம்பினேஷன் இந்த படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அதனால் ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தியது.
ஆனால் படத்தின் சுமாரான கதை காரணமாகவும் மற்றும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளும் சரிவர ரசிகர்களை சென்றடையததாலும் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது. திரையிட்ட சிலநாட்களிலேயே தியேட்டர்களை விட்டு வெளியேறிய இந்த படம், வரும் டிசம்பர் 29ல் ஓடிடி தளத்தில் ரிலீசாக இருக்கிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.