தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

என்.டி.பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி படம் நேற்று வெளியானது. ஒரு நாள் முன்னதாக அதாவது நேற்று முன்தினம் உலகின் பல நாடுகளில் வெளியானது. இதை முன்னிட்டு ஆங்காங்கே உள்ள தெலுங்கு சினிமா ரசிகர்கள் சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்தனர்.
அந்த வகையில் அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள தியேட்டரில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அந்த பகுதியில் ஆந்திர மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். டிக்கெட்டுகள் பல நாட்களுக்கு முன்பேவிற்று தீர்ந்திருந்தது.
படம் வெளியான நாளில் தியேட்டர் முன் பல மணி நேரத்துக்கு முன்பாகவே ரசிகர்கள் கூடினர். படம் திரையிடத் தொடங்கியதும் பலாய்யா... பாலய்யா... கூச்சலிட்டபடி என்.டி.பாலகிருஷ்ணாவின் என்ட்ரி காட்சிக்கு ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் கூச்சலிட்டபடியும் பேப்பர் துண்டுகளை திரையை நோக்கி வீடியபடியும் இருந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தியேட்டர் நிர்வாகம் படத்தை நிறுத்திவிட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தது. தியேட்டருக்கு வந்த போலீசார். “நீங்கள் இப்படி செய்வது எங்கள் நாட்டின் சட்டதிட்டத்துக்கு முரணானது. தொடர்ந்து உங்களை படம் பார்க்க அனுமதிக்க முடியாது. நீங்களாக வெளியேறுங்கள். இல்லாவிட்டால் வெளியேற்றுவோம்” என்று கூறினார்கள். இதை தொடர்ந்து ரசிகர்கள் அமைதியாக வெளியேறினார்கள்.
இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.