இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மாண்டியா : குடியரசு தினத்தை அவமதித்ததாக நடிகை ரச்சிதா ராம் மீது மத்துார் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர்கள் தர்ஷன், ரவிசந்திரன், நடிகை ரச்சிதா ராம் ஆகியோர் நடித்த கிராந்தி திரைப்படம், வரும் 26ம் தேதி குடியரசு தினம் அன்று திரைக்கு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் திரைப்பட விழா ஒன்றில் பேசிய அவர், வரும் 26ம் தேதி குடியரசு தினத்தை மறந்து விடுங்கள். 'கிராந்தி' யோத்வசாவை கொண்டாடுங்கள்' என பேசியிருந்தார். அவரின் பேச்சுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, கர்நாடக மாநில அறிவியல் அராய்ச்சி கவுன்சில் தலைவர் சிவலிங்கய்யா, மத்துார் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில், 'இந்தியா சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் ஆகிறது. நம் நாட்டின் அரசியல் சாசனம் ஏதோ ஒரு வகையில் பிரச்னைகளை சந்தித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை ரச்சிதா ராம், 'குடியரசு தினத்தை மறந்துவிட்டு, 'கிராந்தி'யை கொண்டாட வேண்டும்' என, பேசியுள்ளார். அரசியல் அமைப்புக்கு எதிரான வெளிப்படையான அறிக்கையானது, அரசியல் அமைப்பு சட்டம் அமலுக்கு வந்த நாளை அவமதிக்கும் செயலாகும். எனவே, அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து, அவரை நாட்டை விட்டு நாடு கடத்த வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.